STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 167 (Super idea, Aunt Margret 5)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

167. மார்கரெட் அத்தையின் ஆலோசனை 5


டெர்ரிக்கான பரிசுகளை ரூத்தும், பிலிப்புவும் கொண்டு சென்றார்கள். வியாதிப்பட்ட அவர்களின் நண்பன் ஆச்சரியப்படப் போகிறான்.

போகும் வழியில் அவர்கள் டெர்ரியின் அம்மாவை சந்தித்தார்கள். அவள் அழுதாள். அவளுக்கு ஆறுதல் கூற ரூத் முயற்சித்தாள். நல்ல மேய்ப்பன் இயேசு அவனை பராமரிப்பார், அவனை நேசிப்பதினால் உதவி செய்வார் என்று கூறினாள்.

பிலிப்பு: “நாங்கள் உங்களுக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறோம். (காசுகளை கொட்டும் சத்தம்) எங்களிடம் உள்ளது இவ்வளவு தான். நீங்கள் இதை வைத்து டெர்ரிக்கு பால் வாங்கலாம்”.

அம்மா: “மிகவும் நன்றி, நீங்கள் இரக்கமுள்ள பிள்ளைகள்; போங்கள், டெர்ரி உங்களுக்காக காத்திருக்கிறான்”.

(நடந்து செல்லும் சத்தம்)

பிலிப்பு: “ரூத்! என்னை தவறாக நினைக்காதே! நான் எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டேனே!”

ரூத்: “பரவாயில்லை. நல்ல மேய்ப்பன் சிலுவையில் மரிக்கும்போது தனது உயிரையே தியாகம் செய்திருக்கிறார். எனவே நாம் கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது”.

பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்ட டெர்ரி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஆனாலும் அவன் முன்பிருந்ததை விட அதிக மனசோர்வடைந்தான்.

டெர்ரி: “இனி எந்த உதவியும் செய்ய முடியாது என டாக்டர் சொல்லிவிட்டார். நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை”.

இறைவன் நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்டுள்ளரா என்று பிலிப்புவும், ரூத்தும் தங்களுக்குள் சிந்தித்தார்கள். ஏன் அவர் ஒரு அற்புதம் செய்யவில்லை?

சோர்வுற்றவர்களாக, மாலையில் வீட்டிற்கு வந்தார்கள். விருந்தினர் அறையை மிகவும் அருமையாக மார்கரெட் அத்தை சுத்தம் செய்திருந்தார்கள்.

மார்கரெட் அத்தை: “டெர்ரியும், அவனுடைய அம்மாவும் நம்முடன் வந்து தங்குவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

ரூத்: “அற்புதம்! அருமையான யோசனை!”

ஆம்புலன்ஸ் வண்டியில் டெர்ரி இந்த வீட்டிற்கு வந்தான். அவனுக்கு அந்த அறை மிகவும் பிடித்திருந்தது. அவனுடைய படுக்கை ஜன்னல் அருகே இருந்தது.

டெர்ரி: “இது அருமையாக இருக்கிறது”.

பின்பு அவன் நல்ல மேய்ப்பன் இயேசுவின் படம் சுவற்றில் தொங்குவதை உற்றுப் பார்த்தான். இயேசு தொலைந்துபோன ஆட்டைக் காக்கும்படி தனது கையை நீட்டிக் கொண்டிருந்தார்.

டெர்ரி: “ரூத், மேய்ப்பன் தான் கண்டுபிடித்த ஆட்டை தனது தோளில் சுமந்து கொண்டிருக்கும் படம் எனக்கு வேண்டும்”.

போதகர் ராபிங்கர் அவனுக்கு ஒருபடம் கொடுத்தார். அந்தப்படத்தில் அநேக ஆடுகள் உள்ளன. இயேசு அவைகளின் முன்னே நடக்கிறார். தனது தோளில் ஒரு ஆட்டை சுமந்து செல்கிறார்.

டெர்ரி: “அவர் அதை எங்கே கொண்டு செல்கிறார்?”

போதகர்: “வீட்டிற்கு”.

டெர்ரி: “அது எங்கே உள்ளது?”

போதகர்: “இயேசு வாழுகின்ற இடம். அங்கே கண்ணீர் இல்லை, வலிவேதனை இல்லை”.

டெர்ரி: “வலி இருக்காதா? எல்லாரும் அங்கே செல்ல முடியுமா?”

போதகர்: “நல்ல மேய்ப்பனுக்கு சொந்தமான அனைவரும் செல்லலாம்”.

டெர்ரி: “நான் அவருக்குச் சொந்தமாக விரும்புகிறேன். அவரிடம் போக விரும்புகிறேன்”.

டெர்ரி விண்ணப்பம் செய்தான் தனது கையில் அந்தப் படத்தை உறுதியாகப்பிடித்துக் கொண்டான். பிறகு அவன் தூங்கிவிட்டான்.

நடு இரவு நேரத்தில் வீட்டில் காலடிச் சத்தம் கேட்டபோது என்ன நடந்தது?

அடுத்த நாடகத்தில் இதற்கான பதிலை நான் சொல்வேன்.


மக்கள்: உரையாளர், பிலிப்பு, ரூத், அம்மா, டெர்ரி, போதகர், மார்கரெட் அத்தை.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 12:39 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)