STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 048 (Small man – big cheat)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

48. சிறிய மனிதன் - பெரிய ஏமாற்றுக்காரன்


(கூட்டத்தாரின் சத்தம்)

சகேயு: “தள்ளிப் போ! நான் போக வேண்டும்!”

மனிதன்: “ஏன் தள்ளுகின்றாய்? எல்லாரும் வந்து கொண்டிருக்கிறார்கள்”.

சகேயு: “என்னால் எதையும் காண முடியவில்லை”.

மனிதன்: “அமைதியாய் இரு. போ அந்தப் பக்கம்”.

அவனால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. எல்லாரும் அவனை அறிந்திருந்தார்கள். ஆனால் அவனை யாருக்கும் பிடிக்கவில்லை. அவனுக்கு அழகான வீடு, அருமையான ஆடைகள் இருந்தன. அவன் குள்ளமானவன். அவன் பெரிய பணக்காரன். அவன் நேர்மையாக பணம் சம்பாதிக்கவில்லை என்று அனைவரும் அறிந்திருந்தார்கள். அவன் பெயரின் அர்த்தம் “குற்றம் அற்றவன்” ஆனால் அவன் பெரிய நயவஞ்சகனாக இருந்தான்.

அவன் எரிகோவில் இருந்த வரிவசூல் மையத்தின் பொறுப்பாளனாக இருந்தான். பொருட்களை இறக்குமதி செய்யும் அனைவரும் அங்கு வரிகளைச் செலுத்த வேண்டும். சகேயு சட்டங்களின் படி செயல்படவில்லை. அவன் மக்களிடம் இருந்து அதிக பணத்தை வாங்கினான். அவனுடைய மேலதிகாரி ரோமில் இருந்ததால் இதைக் குறித்து எதுவும் செய்யவில்லை. சகேயு விரும்பிய படி நடந்துக் கொண்டான். இதன் மூலம் திரு. குற்றமற்றவன் குற்றம் நிறைந்தவனாக மாறினான்.

சகேயு அதிக பணத்தை பெற்றிருந்தான். ஆனால் சந்தோஷம் இல்லை. ஒரு நாள் குறிப்பிடத்தக்க காரியம் எரிகோவில் நிகழ்ந்தது. இயேசு அங்கு வந்தார்.

இந்த குள்ள மனிதன் சகேயு இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை விட்டுவிட விரும்பவில்லை. இவன் காணமுடியாதபடி கூட்டம் அதிகமாக இருந்தது. அவன் மரத்தின் மீது ஏறலாம் என யோசித்தான். விரைவாக அவன் மரத்தில் ஏறினான். அங்கு இருந்து பார்ப்பது அருமையாக இருந்தது. இயேசு வந்தார். மிக அருகே நெருங்கி வந்தார். சகேயு ஆச்சரியமடைந்தான். இயேசு அந்த மரத்தின் கீழே நின்றார். சகேயுவின் இருதயம் வேகமாக துடித்தது. இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்தார். அவர் அவனை உற்றுப் பார்த்தார்? எவ்விதம் இயேசு சகேயுவை அறிந்திருந்தார்? இயேசு அவனிடம் பின்வருமாறு கூறினார்.

இயேச: “சகேயுவே, மரத்தை விட்டு சீக்கிரம் கீழே இறங்கி வா. இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும்”.

இயேசு தனக்கு சொன்னபடியே சகேயு செய்தான். மரத்தை விட்டு கீழே இறங்கி வந்தான். தனது வீட்டிற்கு இயேசுவை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றான். ஆனால் மற்றவர்கள் இதைக் குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

மனிதன்: “இயேசு அவன் வீட்டிற்கு போகிறாரா? அவன் எவ்வளவு மோசமானவன் என்று அவருக்குத் தெரியாதா?”

ஆம் இயேசு அதை அறிந்திருந்தார். இருப்பினும் அவனை நேசித்தார். சகேயு இயேசுவை அறிந்து கொண்டான். தனது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டான்.

சகேயு: “ஆண்டவராகிய இயேசுவே, நான் என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். நான் யாரிடமாவது அநியாயமாய் வாங்கியிருந்தால் அதை நான்கு மடங்காக திரும்பிச் செலுத்துகிறேன்”.

இயேசு: “சகேயுவே நீ இப்போது இரட்சிக்கப்பட்டிருக்கிறாய். இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. நான் இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவும் வந்தேன்”.

இயேசு உன்னிடமும் வருவார். அவரை உன் வாழ்வில் ஏற்றுக்கொள். அவரிடம் உன் பிரச்சினைகளைக் கூறு. அவர் உன் வாழ்வை சரிப்படுத்துவார்.


மக்கள்: உரையாளர், சகேயு, இயேசு, மனிதன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 09:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)